நீண்ட நாள் இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாக சுக்கு பால் குடிக்காலாம் என பலர் கூறுவார்கள். இதை மூன்று நாள் குடித்தால் இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கான செய்முறை குறித்து தற்போது காணலாம்.
2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை டேபிள் ஸ்பூன் உளுந்து எடுக்க வேண்டும். அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை நன்றாக கழுவி எடுக்க வேண்டும். பின்னர், இதில் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
4 துண்டு சுக்கை இடி கல்லில் இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியையும் இவற்றுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இத்துடன் 2 ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றுடன் துருவிய 1 கப் தேங்காய் சேர்க்க வேண்டும்.
ஒரு கருப்பட்டியை சுடுதண்ணீரில் போட்டு கரைத்து எடுக்க வேண்டும். முதலில் ஊற வைத்த அனைத்தையும் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இதை வடிகட்டி எடுக்க வேண்டும். பின்னர், மீண்டும் அரைக்க வேண்டும். இதே போல் 3 முறை அரைத்து எடுக்க வேண்டும்.
பின்னர், கருப்பட்டி கரைசலை வடிகட்டி இதனுடன் சேர்க்க வேண்டும். இதையடுத்து, இந்தக் கலவையை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். இவ்வாறு செய்து எடுத்தால் சுக்கு பால் தயாராகி விடும். இதை மூன்று நாள்களுக்கு குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“