/indian-express-tamil/media/media_files/2025/03/22/jZ5vYXB1h53vVgLDfWvf.jpg)
Summer skin care face mask at home
வெயில் காலம் வந்துட்டாலே போதும், சருமம் பாடாய்ப்படும்! எரிச்சல், வேர்வை, அரிப்பு, கருமைன்னு ஏகப்பட்ட தொல்லைகள் வரும். ஆனா கவலைப்படாதிங்க! உங்க சருமத்தை கூலாகவும், பளபளப்பாகவும் வச்சுக்க ஒரு சூப்பர் வழி இருக்கு. அதுதான் இந்த தயிர் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்!
சூரியனால உங்க முகம் பொலிவிழந்து மந்தமா இருக்கா? டோன்ட் வொர்ரி! தயிரும் கற்றாழையும் சேர்ந்து உங்க முகத்துக்கு புது பொலிவையும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.
எப்படி யூஸ் பண்ணலாம்னு பார்க்கலாமா?
ஒரு சின்ன கிண்ணத்துல ஒரு ஸ்பூன் தயிரையும், மூணு ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் போட்டு நல்லா கலந்துக்கோங்க. இந்த கலவையை உங்க முகம் முழுக்க அப்ளை பண்ணிட்டு 15-20 நிமிஷம் அப்படியே விடுங்க. அதுக்கப்புறம் தண்ணியால முகத்தைக் கழுவுங்க. வித்தியாசம் கண்டிப்பா தெரியும்!
தர்பூசணியும் தயிரும் கூட ட்ரை பண்ணலாம்!
தர்பூசணியில விட்டமின் ஏ, சி நிறைய இருக்கு. இது உங்க முகத்துக்கு ரொம்ப நல்லது. சருமத்துக்கு நல்ல பளபளப்பைக் கொடுக்கும், ஈரப்பதமாவும் வச்சுக்கும். எண்ணெய் பசை சருமத்துக்கு இது ஒரு அருமையான தீர்வு.
கொஞ்சம் தர்பூசணியை துருவி ஒரு பாத்திரத்துல போட்டுக்கோங்க. அதுகூட ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நல்லா கலக்குங்க. ஒரு பிரஷ் வச்சு இந்த கலவையை உங்க முகம் முழுக்க தடவுங்க. வெயில் பட்ட இடங்கள்ல முக்கியமா போடுங்க. 15-20 நிமிஷம் கழிச்சு முகத்தைக் கழுவிடுங்க. இந்த ஃபேஸ் மாஸ்க் சூரியனால ஏற்பட்ட பாதிப்புல இருந்து உங்க முகத்துக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.
இனிமே வெயிலைப் பத்தி கவலைப்படாம ஜாலியா இருங்க! இந்த சிம்பிளான ஃபேஸ் மாஸ்க் உங்க சருமத்தை எப்பவும் கூலாவும், பளபளப்பாவும் வச்சுக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.