/indian-express-tamil/media/media_files/cuCpwpV0QpdZRs9IGHCh.jpg)
Summer Hair Care
கோடை காலம் தொடங்கிவிட்டாலே, உச்சி முதல் பாதம் வரை வெப்பத்தின் தாக்கம் வாட்டி எடுக்கும். அதிலும் குறிப்பாக, உச்சந்தலையின் நிலைதான் மிகவும் சங்கடமாக இருக்கும். அதிக வியர்வை, பிசுபிசுப்பு, அதனுடன் சேர்ந்து வரும் துர்நாற்றம் என அனைத்தும் உங்களின் உற்சாகத்தைக் குறைத்துவிடும். இனி இந்த பிரச்சனைகளை கண்டு அஞ்ச வேண்டாம்! உங்கள் கூந்தலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
புதினா இலையின் அற்புதம்
கோடை காலத்தில் தலைமுடிக்கு புதினா பயன்படுத்தும் போது பல அற்புதமான பலன்கள் கிடைக்கும். இது உச்சந்தலையின் பிசுபிசுப்பை நீக்கி, துர்நாற்றத்தையும் போக்கும். மேலும், பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் இது உதவும். புதினா இலைகள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக, புதினா பானங்கள் உடல் அமைப்பை அமைதிப்படுத்தி, செரிமானத்திற்கு உதவுகின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள புதினா, உங்கள் தலைமுடி பராமரிப்பிற்கு சிறந்த பலன்களை அளிக்கும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையாக ஊட்டமளித்து, அடர்த்தியாகவும், மென்மையாகவும் மாற்றும்.
புதினா ஹேர் மாஸ்க் செய்ய தேவையானவை:
புதினா இலைகள் ஒரு கைப்பிடி
தயிர் ஒரு கிண்ணம்
எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில், புதினா இலைகளை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
சுத்தப்படுத்திய இலைகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தயிர் சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் சேர்க்கவும். பேஸ்ட் சற்று திக்கான பதத்தில் இருக்க வேண்டும்.
அரைத்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு அரைக்கவும். இப்போது உங்கள் ஹேர் மாஸ்க் தயார்!
இந்த மாஸ்க்கை உங்கள் கைகளால் உச்சந்தலையிலும், தலைமுடியின் ஒவ்வொரு இழையிலும் நன்கு தடவவும். 30 நிமிடங்கள் கழித்து, ஒரு மைல்டான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை கழுவவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.