நிச்சயமாக, இந்த பானங்கள் தற்காலிகமாக புத்துணர்ச்சி அளித்தாலும், அவரது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை மோசமாக்கியது. நீரேற்றம் அனைவருக்கும் முக்கியம், ஆனால் நீரேற்றம் செய்யும் முறை இன்னும் முக்கியமானது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் பொருந்தும்.
ஏன் அதிகப்படியான தண்ணீர் பருகுவது உதவாது?
பலரும் நீரிழப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் நிறைய சாதாரண தண்ணீரை ஒரே நேரத்தில் குடிக்கிறார்கள். ஆனால் உடல், திடீரென அதிக அளவு நீர் வருவதை உணர்ந்து, ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் குறைக்கக்கூடும் என்று நினைக்கிறது. இதன் காரணமாக, உடனே அந்த நீரை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது. இதனால் அந்த நீர் உடலில் சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இந்த பாதுகாப்பு முறைக்கு 'போலஸ் எதிர்வினை' (Bolus response) என்று பெயர். இருப்பினும், நீங்கள் உணவு மற்றும் சிற்றுண்டிகளுடன் தண்ணீர் குடிக்கும்போது, உடல் அந்த திரவத்தை தக்க வைத்துக் கொள்கிறது. எனவே, நாள் முழுவதும் சிறிய அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
எலக்ட்ரோலைட்ஸ் ஏன் மிகவும் முக்கியம்?
/tamil-ie/media/media_files/uploads/2022/09/coconut-tree-pixabay-1200.jpg)
கோடை காலத்தில் வியர்வை வெளியேறுவதால் உடலில் இருந்து சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகின்றன. இவை உடலில் திரவ சமநிலையை பராமரிக்க மிகவும் அவசியம். எலக்ட்ரோலைட்டுகள் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், உடலில் எலக்ட்ரோலைட்டுகள் போதுமான அளவு இல்லாவிட்டால், தண்ணீர் சரியாக உறிஞ்சப்படாமல் போகலாம்.
உங்கள் கோடை நீரேற்றம் இப்படி இருக்கட்டும்:
சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, பின்வரும் எலக்ட்ரோலைட் நிறைந்த விருப்பங்களை முயற்சிக்கவும்:
புதினா, எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகள் கலந்த சாதாரண நீர்.
வீட்டில் செய்யப்பட்ட மோர்.
ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்த எலுமிச்சை நீர்.
/indian-express-tamil/media/media_files/nvzVRDYaNwzyTCNSK2wo.jpg)
கோந்து கத்தீரா - சில தாவரங்களின் சாற்றில் இருந்து எடுக்கப்படும் இந்த இயற்கை பசையை இரவில் ஊறவைத்து, காலையில் குளிர்ச்சியாக உட்கொள்ளலாம்.
சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் (துளசி விதைகள்) கலந்த நீர் –
கூடுதல் நீரேற்றம் மற்றும் நார்ச்சத்துக்காக எலுமிச்சை நீரில் ஊறவைத்த விதைகள்.
ஃபிரெஷ் புதினா-எலுமிச்சை நீர் - இது மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் கோடை வெப்பத்தை இயற்கையாக வெல்ல சிறந்தது!
குறைந்த அளவு இளநீர் - காலையில் சிறிய அளவில்.
வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணுதல்.
அதன் விளைவு?
நான்கு வாரங்களுக்குள், திரு. ரோராவின் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக கட்டுக்குள் வந்தது. அவர் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருந்தார். மேலும், அவருக்கு ரத்த சர்க்கரை திடீரென அதிகரிப்பதும், குறைவதுமான பிரச்சினைகள் இல்லை. நீரேற்றமாக இருப்பது முக்கியம் தான், ஆனால் நீங்கள் ஆடம்பரமான பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டியதில்லை. சாதாரண தண்ணீர், இயற்கையான உணவுகள் மற்றும் சிறிய, புத்திசாலித்தனமான பழக்கங்கள் உங்களை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் - திரு. அரோராவைப் போலவே!
(சிம்ரத் கதுரியா ஒரு உணவு மற்றும் எடை இழப்பு நிபுணர்)
Read in English: Summer hydration mistakes: Why drinking excess water isn’t enough