/indian-express-tamil/media/media_files/2025/05/01/U6DtQSvV30pA4bpPN39c.jpg)
Summer skin care home remedies
வெளியே தாங்கமுடியாத அளவுக்கு சூரியன் தன் கோரமுகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. கொளுத்தும் வெயிலால் அத்தியாவசிய தேவைக்குக் கூட பகலில் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், சில நேரங்களில் சின்னம்மை, சூட்டுக்கொப்பளம் போன்ற பிரச்னைகள் நம்மை தாக்கிவிடும். முக்கியமாக இந்த நேரங்களில் குழந்தைகளுக்கு வியர்க்குரு போன்ற தோல் வியாதிகள் வந்து தொல்லை தரும்.
இதற்கு ஒரு எளிய தீர்வு சொல்கிறார் சித்த மருத்துவர் யோக வித்யா
மஞ்சளில் ஆண்டி பாக்டீரியல், ஆண்டி பங்கல் போன்ற நிறைய மருத்துவ பண்புகள் உள்ளன. ஒரு பக்கெட் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குளிக்கும் போது தோல் தொடர்பான வியாதிகள் வராது. உடலும் குளுமையாகும். இதில் கொஞ்சம் வேப்பிலையும் சேர்க்கலாம், என்கிறார் டாக்டர் யோகவித்யா.
இந்த எளிய முறையைப் பின்பற்றி வெயில் காலத்து தோல் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.