வானத்தை போல சீரியல் மூலம் யுனிவர்சல் அண்ணன் ஆகியுள்ளார் சின்ராசு. இவரது பெயர் தமன்குமார். மதுரையை சேர்ந்தவர். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 15 வயதிலிருந்தே ஸ்கிரிப்ட் ரைட்டிங் மீது ரொம்ப ஆர்வம். இன்ஜினியரிங் படித்த இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வேலையை விட்டு தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். அதன்பிறகு ஆடிஷன் மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
Advertisment
முதன்முதலில் 2011ல் படித்துறை என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் ரிலீஸாகவில்லை. பிறகு ஆச்சர்யங்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு ஓடியது. அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிஷனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார் தமன் குமார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என போன்ற சில படங்களில் நடித்தார். தற்போது கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார் தமன்குமார்.
Advertisment
Advertisements
பல படங்களில் நடித்த பிறகு சின்னத்திரைக்குள் நுழைந்தார். சின்னத்திரையில் சன்டிவியின் வானத்தைப் போல சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். சின்ராசுவாக தங்கை மீது பாசத்தை பொழியும் அண்ணனாக நடித்து வருகிறார். துளசி-சின்ராசு கேரக்டர்கள் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. சினிமாவில் நடித்ததை விட தற்போது அதிகம் மக்களிடம் ரீச் ஆகியுள்ளார் சின்ராசு. சினிமாவில் இவரது முதல் நண்பர் ஈரோடு மகேஷ்தான். இவருக்கு பிடித்த நடிகை ரீமாசன் மற்றும் பிந்துமாதவி. சின்னத்திரை, சினிமா இரண்டிலும் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil