நம் வீடுகளில் வழக்கமாக தோசையைதான் அனைவரும் தேர்வு செய்வோம். இந்நிலையில் தோசை மாவு இல்லாதபோதும் அரிசி மாவு வைத்து சுடச் சுட தோசை செய்து சாப்பிட முடியும்.
அரிசி மாவை ஒரு கப் அளவிற்கு எடுத்துகொள்ளுங்கள். இத்துடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துகொள்ளுங்கள். இந்நிலையில் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு, அதில் 2 வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய், துருவிய கேரட், உப்பு சேர்த்துகொள்ளுங்கள். மிக்ஸி கழுவிய நீரையும் இதில் சேர்த்துகொள்ளுங்கள். ½ ஸ்பூன் சீரகத்தூள் , ½ மிளகுத்தூள், ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள், ¼ ஸ்பூன் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து 1 மணி நேரம் கழித்து, தோசைக் கல்லை வைத்து தோசை சுட்டு எடுக்கவும்.
சூப்பரான மொறு மொறு தோசை ரெடி. இதற்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்போவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“