கொஞ்சூண்டு புளி போதும்... இப்படி செய்தால் தோசை ஒட்டாமல் கிழியாமல் வரும்!
வீட்டில் தோசை சுடும்போது தோசை தவாவில் ஒட்டிக்கொண்டு சரியாக வரவில்லையா கவலைப்படாதீர்கள். கொஞ்சூண்டு புளி போதும், இப்படி செய்தால் தோசை ஒட்டாமல் கிழியாமல் வரும். ட்ரை பண்ணி பாருங்க.
வீட்டில் தோசை சுடும்போது தோசை தவாவில் ஒட்டிக்கொண்டு சரியாக வரவில்லையா கவலைப்படாதீர்கள். கொஞ்சூண்டு புளி போதும், இப்படி செய்தால் தோசை ஒட்டாமல் கிழியாமல் வரும். ட்ரை பண்ணி பாருங்க.
தோசை சுடும்போது தவாவில் ஒட்டாமல், கிழியாமல் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்க் தமிழ் சாய்ரஷீக் (@ASKTAMIL_SAIRASHIQ) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். Photograph: (YouTube/ @ASKTAMIL_SAIRASHIQ)
உங்கள் வீட்டில் தோசை சுடும்போது, தோசை தவாவில் ஒட்டிக்கொண்டு சரியாக வரவில்லையா கவலைப்படாதீர்கள். கொஞ்சூண்டு புளி போதும், இப்படி செய்தால் தோசை ஒட்டாமல் கிழியாமல் வரும். ட்ரை பண்ணி பாருங்க.
Advertisment
தோசை சுடும்போது தவாவில் ஒட்டாமல், கிழியாமல் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்க் தமிழ் சாய்ரஷீக் (@ASKTAMIL_SAIRASHIQ) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் தோசை சுடும்போது தோசை தவாவில் ஒட்டிகொண்டு கிழிந்து சரியாக வரவில்லையா? ஒரே ஒரு பொருளை மட்டும் கிளீன் பண்ணிவிட்டு தோசை சுட்டு பாருங்கள், தோசை ஓட்டாமல், கிழியாமல் சூப்பராக வரும். அது என்ன பொருள் என்றால், கொஞ்சூண்டு புளி போதும் தோசை சூப்பராக வரும். அதை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
முதலில் தோசை தவாவை அடுப்பில் வைத்துவிட்டு, கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும்போது, ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பை எல்லாம் கிளீன் பண்ணி எடுத்துவிடுங்கள். அதற்கு பிறகு, தவாவில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றுங்கள். அதற்கு பிறகு, கொஞ்சமாக புளி எடுத்து ஒரு காட்டன் துணியில் வைத்து சுற்றி தவாவை தேய்த்து எடுத்துவிடுங்கள்.
அதற்கு பிறகு, அந்த தவாவில் தோசை ஊற்றினால், கொஞ்சம் கூட ஒட்டாமல் கிழியாமல் தோசை கிரிஸ்பியாகவும் சூப்பராகவும் வரும். ஆனால், முதல்முறை தோசை ஊற்றும்போது மட்டும் கொஞ்சம் தடிமனாக ஊற்றிக்கொள்ளுங்கள். அதற்கு அடுத்தடுத்து தோசை சுடும்போது மெல்லிசா சுட்டுக்கொள்ளலாம்.
அதே போல, தோசை தவா சூடாகும் முன்பே தோசை ஊற்றினாலும் தோசை சரியாக வராது. அதே போல, தவாவை அதிகமாக சூடாக இருந்தாலும் தோசை ஊற்றினாலும் தோசை சரியாக வராது. இதை கவனத்தில் கொள்ளுங்கள்.