Advertisment

செயற்கை இனிப்பு அஸ்பார்டேம் புற்றுநோய் ஏற்படுத்துமா? உலக சுகாதார நிறுவன ஆய்வு சொல்வது என்ன?

மூன்று விலங்கு பரிசோதனை ஆய்வுகள் எலிகளில் கட்டிகளின் அதிகரித்த நிகழ்வுகளைக் காட்டியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Artificial sweeteners

Artificial sweeteners

உலக சுகாதார அமைப்பின் (WHO) குழு, செயற்கை இனிப்பு அஸ்பார்டேம் (aspartame) செயற்கை இனிப்பு மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தலாம், என வகைப்படுத்தியது.

Advertisment

ஆனால் அதேநேரம் மற்றொரு குழு, காபி மற்றும் தேநீரில் இரண்டு அஸ்பார்டேம் மாத்திரைகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்காது, என்று கூறியுள்ளது.

டயட் சோடா மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற பொருட்களில் மறைந்திருக்கும் அஸ்பார்டேம் நினைத்து தான், சுகாதார நிபுணர்கள் மிகவும் கவலையடைகின்றனர்.

தற்போதைய ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளல் 0-40 mg/kg மிகவும் அதிகமாகும்.

ஒரு கேன் டயட் சாஃப்ட் டிரிங்கில் சுமார் 200 முதல் 300 மி.கி அஸ்பார்டேம் உள்ளது என்று கூறுகிறார் WHO இன் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டாக்டர் பிரான்செஸ்கோ பிரான்கா.

அதாவது சராசரியாக 70 கிலோ எடையுள்ள ஒருவர் 9 முதல் 14 கேன்கள் வரை சோடாவை பாதுகாப்பாக உட்கொள்ளலாம். இருப்பினும், மக்கள் இனிப்புகளை உட்கொள்வதை முழுவதுமாக குறைக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் பரிந்துரைக்கிறோம்.

WHO இன் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச ஏஜென்சியின் பகுப்பாய்வு, இந்த தயாரிப்பு "மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தலாம்" என்று கண்டறிந்தது - புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) புற்றுநோய்களை வகைப்படுத்தும் நான்கு நிலைகளில் இது மூன்றாவது-உயர்ந்த நிலை ஆகும்.

இந்த பகுப்பாய்வு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து மூன்று கூட்டு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அஸ்பார்டேம் உட்கொள்வதற்கான ப்ராக்ஸியாக செயற்கை இனிப்பு பானங்களை உட்கொள்வதை அது கருதுகிறது மற்றும் அதை புற்றுநோய் நிகழ்வுகளுடன் இணைக்கிறது.

மூன்று ஆய்வுகளும் இந்த பானங்களின் நுகர்வுக்கும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பைக் காட்டியது.

மூன்று விலங்கு பரிசோதனை ஆய்வுகள் எலிகளில் கட்டிகளின் அதிகரித்த நிகழ்வுகளைக் காட்டியது.

ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுதல், நாள்பட்ட அழற்சி மற்றும் உயிரணு இறப்பு வழிமுறைகளில் மாற்றங்கள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் முகவர்களைப் போலவே அஸ்பார்டேம் பண்புகள் இருப்பதைக் காட்டும் இயந்திரவியல் ஆய்வுகளிலிருந்து "வரையறுக்கப்பட்ட சான்றுகள்" இருப்பதாகவும் குழு கூறியது.

12 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எந்த முரண்பாடுகளும் இல்லாத 25 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவால் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

WHO மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு சேர்க்கைகள் மீதான கூட்டு நிபுணர் குழுவின் (JECFA) இரண்டாவது மதிப்பீட்டில், "அஸ்பார்டேம் உட்கொண்ட பிறகு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு, விலங்கு அல்லது மனித தரவுகளிலிருந்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று கூறியது.

சில கூட்டு ஆய்வுகளில் கல்லீரல், மார்பகம் மற்றும் இரத்த புற்றுநோய் வகைகள் போன்ற சில புற்றுநோய்களின் அதிகரிப்பு காணப்படுவதாக குழு கூறியது. "இருப்பினும், அஸ்பார்டேம் நுகர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் வகைக்கும் இடையே ஒரு நிலையான தொடர்பை நிரூபிக்க முடியவில்லை.

அனைத்து ஆய்வுகளும் அஸ்பார்டேம் அல்லது அஸ்பார்டேம் கொண்ட பானங்களின் வெளிப்பாட்டைக் கணக்கிடுவதில் வரம்புகளைக் கொண்டிருந்தன.

IARC மோனோகிராஃப்ஸ் திட்டத்தின் செயல் தலைவர் டாக்டர் மேரி ஷூபவுர்-பெரிகன் இரண்டு குழுக்களின் பரிந்துரைகளும் கைகோர்த்துச் செல்கின்றன என்பதை விளக்கினார்: ஆய்வு, குறிப்பிட்ட பண்புகள் மற்றும் ஏதாவது புற்றுநோயை உண்டாக்க முடியுமா என்பதைப் பார்க்கிறது; இது ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு மட்டத்தில் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தைப் பார்க்கவில்லை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment