பெரும்பாலும், ஆபத்தான நிலைக்கு செல்லாத வரை கொலஸ்ட்ரால் இருப்பதை கண்டறிவது கடினம். அதன் அறிகுறிகள் அவ்வப்போது தென்பட்டாலும் அதை கொலஸ்ட்ரால் அறிகுறி என்று உறுதியாக எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஆனால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்றால் சில அறிகுறிகள் காட்டும். அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறீர்கள் எனில் இதயத்திற்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் செல்வதில்லை என அர்த்தம். எனவே, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
குமட்டல் என்பது கொலஸ்ட்ரால் உட்பட பல வகையான நோய்களுக்கு அறிகுறியாகும். கொலஸ்ட்ரால் சேரும்போது இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் உடல் உறுப்புகளுக்கு அசௌகரியம் ஏற்படும். அதன் விளைவாக குமட்டல் வரலாம்.
இரத்த ஓட்டம் இதயத்திலிருந்து கால் வரை கீழே சென்று மீண்டும் இதயத்திற்கு பயணிக்கும். இந்த செயல்பாடு சீராக இல்லாமல் இருந்தால் கால்களில் குளுர்ச்சியான உணர்வு, கால் அடிக்கடி மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கால்களில் உள்ள இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் அடைப்பு உள்ளது எனில் இந்த அறிகுறிகள் தோன்றும்.
கால்களில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் அப்படியே இருக்கிறது, வலி குறையவில்லை, வீக்கம் குறையவில்லை எனில் அது கொலஸ்ட்ராலின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதுவும் இரத்த ஓட்டம் சீராக இல்லாததை உணர்த்தும் அறிகுறியாகும்.
உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருக்கிறது எனில் அது ஒரு கட்டத்தில் குவிந்து பெருக ஆரம்பிக்கும். பின் அது இரத்த ஓட்டத்தை அணைபோல் தடுத்துவிடும். இதனால் இரத்தம் ஆங்காங்கே தேங்கி உறைந்து இரத்த கட்டிகளாக உருவாகும். பின் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“