நவராத்தி நாளில் கடைசி 3 நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்னென்ன? எப்படி வணங்க வேண்டும் என்பது குறித்து பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களில் நவராத்திரியும் ஒன்று. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு படையல் வைத்து வழிபடுவார்கள். மேலும் நவரத்தி நாளில் கொலு வைப்பது பண்டிகை கொண்டாட்டங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்த நாளில் பலரும நவராத்திரி விரதம் கடைபிடிப்பார்கள்.
இந்த நவராத்தி தினம் கொண்டாடப்படும் 9 நாட்களில், முதல் 3 நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கை அம்மனை வேண்டி வழிபடுவார்கள். அதேபோல் 2-வது 3 நாட்கள் செல்வ செழிப்போடு இருக்க மகாலட்சுமியை வழிபாடு செய்வார்கள். கடைசி 3 நாட்களில், கல்வி, கலை உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் கலைகளை வழிபடுவது வழக்கம். மொத்தத்தில் இந்த 9 நாட்களும், விரதம் மேற்கொள்வது, கொலு வைத்து பூஜை செய்து வழக்கமான சம்பிரதாயமாகும்.
இதில் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்மனையும், 2-வது 3 நாட்கள் மகாலட்சுமி தேவியையும் வணங்க வேண்டும். அதன்பிறகு கடைசி 3 நாட்களாக 7, 8 மற்றும் 9-வது நாட்களில், எந்த தெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்பது குறித்து அனிதா குப்புசாமி வீடியோவில் கூறியுள்ளார். இதில், நவராத்திரி தினத்தில் கடைசி 3 தினங்களாக 7, 8 மற்றும் 9-வது நாளில் நமக்கு கல்வி மற்றும் ஞானத்தை அளிக்கக்கூடிய சரஸ்வதி தேவியை தான் வழங்க வேண்டும்.
இந்த காலக்கட்டத்தில் தான் சரஸ்வதி அல்லது ஆயுத பூழை தினம் வரும். அதற்காக நாம் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த 3 தினங்களில் வீட்டில் எந்த அம்பாள் சிலை இருந்தாலும் அதற்கு சரஸ்வதி தேவி அலங்காரம் செய்ய வேண்டும். சிலை இல்லாதவர்கள், சாமி படத்தை வைத்து பூஜை செய்யலாம். அப்படியும் இல்லை என்றால், கும்பம் அமைத்து வழிபாடு செய்யலாம். இதில் பால் பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபடலாம்.
அதேபோல் பால் பாயாசம், தேங்காய் சாதம், வைத்து படைத்து நீங்களும் சாப்பிட்டு வறுமையில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாம். மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்கும் உணவு வழங்குவது எப்போதும் நல்லது. இந்த நாளில் உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, புடவை அல்லது ஜாக்கெட் பீஸ் என உங்கள் வசதிக்கு தகுந்தார்போல் கொடுக்கலாம். பெரியவர்களாக இருந்தால் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள்.
உங்களிடம் தாம்புலம் வாங்குபவர்கள் உங்களை விட சிறியவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஆசீர்வாதம் நீங்கள் கொடுக்கலாம். அதேபோல் உங்களுக்கு தேவையானதை அம்பாளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“