Advertisment

சுகருக்கு டாப் தீர்வு வெந்தயம்... தினமும் 25 கிராம் இப்படி பயன்படுத்துங்க!

வெந்தயம் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகருக்கு டாப் தீர்வு வெந்தயம்... தினமும் 25 கிராம் இப்படி பயன்படுத்துங்க!

Tamil Lifestyle Update : இன்றைய தலைமுறையினர் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது நீரிழிவு நோய். உடலில் சர்க்கரையின் சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த எத்தனையோ மருத்துவ முறைகள் இருந்தாலும் இயற்கை பொருட்கள் அதிலும் குறிப்பாக வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து தீர்வு காணலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.

Advertisment

பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் காண்ப்படும் முக்கிய சமையல் மசாலா பொருள் வெந்தயம். உணவிற்கு சுவை கொடுப்பது மட்டுமின்றி மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுகிறது. குளிர்காலத்தில், வெந்தய கீரைகள் ஏராளமாக கிடைக்கின்றன. ஆனால் இது சற்று கசப்புத்தன்மையுடன் உள்ளது என்பாதால் பெரும்பாலான மக்கள் ருசியான மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள்.

வெந்தய கீரையில், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலம் உள்ளது. இது, பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, பயன்படுத்தப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வெந்தயம், பல நன்மைகள் உள்ளடக்கியுள்ளதும் மருத்துவத்தில் சிறந்த பயனை தருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, 25-100 கிராம் வெந்தய விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. "வெந்தயம் செரிமானத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது..

இது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. வெந்தய விதைகள் குடலில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்துவதன் மூலம் உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவை மாற்றியமைக்கும் நார்ச்சத்து, 4-ஹைட்ராக்ஸிஸ்லூசின் எனப்படும் அமினோஅல்கனோயிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.

இது நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இன்சுலின் சுரப்பு மற்றும் அமினோ அமிலம் இருப்பதால் இன்சுலின் உணர்திறன் மற்றும் இன்சுலின்-தூண்டுதல் விளைவைக் கொண்ட 2-ஆக்சோகுளூட்டரேட் மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது" கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  இரத்தச் சர்க்கரையைக் குறைப்பதைத் தவிர, வெந்தய விதைகள் கொழுப்பைக் குறைக்க உதவும் சபோனின்களின் சிறந்த மூலமாக உள்ளது.

வெந்தயத்தை உங்கள் உணவில் சேர்க்க பல வழிகள் உள்ளன, நீங்கள் அதை இரவே ஊறவைத்து, காலையில் அதை உங்கள் தேநீரில் கலந்து குடிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment