Tamil Lifestyle Update : இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பொதுவாக சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி உதிர்தல். இந்த பிரச்சினையை சரிசெயய வல்லுநர்கள் முதல் நம் தாய்மார்கள் மற்றும் பாட்டி வரை, அனைவரும் நம் ட்ரெஸ்ஸின் ஊட்டச்சத்திற்கும் வளர்ச்சிக்கும் ஹேர் ஆயில் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். வறண்ட, உதிர்ந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு இது ஒரு இயற்கை தீர்வாக நம்பப்படுகிறது.
ஆனாலும், மக்கள் பொதுவாக நம்பும் ஹேர் ஆயிலை சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. இது குறித்து தோல் மருத்துவரான டாக்டர் ஆஞ்சல் பந்த் இன்ஸ்டாகிராமில் மக்கள் முடி குறித்து பொதுவாக நம்பி வரும் சில கட்டுக்கதைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த பதிவில் முடி எண்ணெய் தடவுவது பற்றிய சில பயனுள்ள உண்மைகளை கூறியுள்ளார்..
“ஹேர் ஆயில் முடியை சீரமைக்க உதவுகிறது. உங்களுக்கு வறண்ட, சேதமடைந்த முடி அல்லது முடி உதிர்வு இருந்தால், இழைகளில் ஹேர் ஆயில் தடவுவது நன்மை தரும் என்று கூறியுள்ளார். உங்கள் தலைமுடிக்கு இரவில் எண்ணெய் விடுவது ஊட்டச்சத்துக்கு அவசியம் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் இரவில் அப்டி செய்யாதிருந்தால் கூடுதல் நன்மை எதுவும் இல்லை. சில மணிநேரங்களில் அதைக் கைவிடலாம்
உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு எண்ணெய் உதவினாலும், அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாது அல்லது முடி வளர்ச்சியை அதிகரிக்காது என்றும் கூறியுள்ளார்.
எண்ணெய் எப்படி உதவுகிறது?
முடியின் மீது ஒரு பூச்சு அமைப்பதன் மூலம், ஹேர் ஆயில் முடியை நிலைநிறுத்துகிறது என்பதை நிபுணர் தெளிவுபடுத்தினார். எனவே, ஹேர் ஆயிலைத் தடவிய பிறகு உங்கள் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதைக் காணலாம். மேலும் "தேங்காய் எண்ணெய் முடிக்கு சிறப்பாகச் செயல்படுகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.
முடியின் கீழ் பகுதியில், வேர்களில் இருந்து 4-5 அங்குலங்கள், உங்கள் இயற்கையான உச்சந்தலையில் எண்ணெய்கள் பொதுவாக எட்டாத இடத்தில் மட்டும் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. இருப்பினும், உங்களுக்கு பொடுகு இருந்தால், முடி எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil