மாறி வரும் உணவு பழ்க்கவழக்கம் காரணமாக பலருக்கு உடல் உடை கூடி வெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த சிரமத்தில் இருந்து விடுபடும் நோக்கில் பலரும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியாக காலையில் வெற்று வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் மற்றும் தேனுடன் பலர் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள்.
இந்த செயல்முறை கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை உறிஞ்சவும் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. தேன், இயற்கையான இனிப்பு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்ததாகவும், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது இருமலை போக்கும், குடலை சுத்தப்படுத்துகிறது, காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் சருமத்திற்கு நல்லது.
தேன் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையின் ஆரோக்கியமான மாற்றாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இது தவிர கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிரம்பியுள்ளன. மக்கள் தங்கள் மூலிகை தேநீர், எலுமிச்சை தேநீர் அல்லது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் தேன் கலப்பது பொதுவானது என்றாலும், ஆயுர்வேதம் முறையில் தேனை எந்த சூடான வடிவத்திலும் பயன்படுத்த அறிவுறுத்ப்படவில்லை.
தேனை நேரடியாக சூடான பால், வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் அல்லது தேநீருடன் கலக்கக்கூடாது என்றும் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ரேகா ராதாமணி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். உடலுக்கு ஒரு சூடான தேன் உண்மையில் நச்சுத்தன்மையுடையது என்றும் கூறியுள்ளார்.
"சூடான தேன் உடலில்" நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் மெதுவான விஷமாக மாறும். சூடான தேன் உடலுக்குள் ஒரு விஷமாக மாறும் என்று ஆயுர்வேதம் விளக்குகிறது. தேன் அதன் இயற்கையான மற்றும் மூல வடிவத்தில் ஊட்டச்சத்து நோக்கங்களுக்காக சிறந்த முறையில் உட்கொள்ளப்படுகிறது, அதே சமயம் கடைகளில் கிடைக்கும் பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட தேனில் சோள சிரப் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மூல தேனில் காணப்படும் மகரந்தம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் என்சைம்களும் இதில் இல்லை.
"பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் அனைத்து தேன்களும் அதீத வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட்டு தொகுக்கப்படுகின்றன. இதனால் கடைகளில் தேனை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், தேனீக்களிடமிருந்து நேரடியாக இயற்கை தேனை விற்கும் நபர்களிடமிருந்து தேனை வாங்கவும், டாக்டர் ராதாமணி அறிவுறுத்துகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil