சிறுநீரக கற்கள் என்பது தற்போது, பொதுவான பிரச்சனை ஒன்றாக மாறி வருகின்றது. அதிலும் பெண்கள் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க வேண்டும்.
முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது மட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கல்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்தலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்கள் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தென்படும் எனவே, அவற்றைக் இனங்கண்டு உடனே கரைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இருந்தால் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறி என்று எடுத்துக்கொள்ளலாம். அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை இருக்கும். திடீரென்று அதிகப்படியான காய்ச்சல், குமட்டல் இருந்தால் உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீர் தெளிவின்றி இருந்தல், சிறுநீரக கற்களுக்கான அறிகுறி ஆகும். மேலும், அது சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும். அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த உணர்வு ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலி, பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி, வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுதல் அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள்.
சித்த மருத்துவம் குழு
மருத்துவர் முத்துக்குமார்
சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்
9344186480
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.