தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2025 ரோடு ஷோ... செப்.26-ல் மதுரையில் தொடக்கம்

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும், "தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2025", செப்டம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை மதுரையில் உள்ள ஐ.டி.ஏ. ஸ்கடர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும், "தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2025", செப்டம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை மதுரையில் உள்ள ஐ.டி.ஏ. ஸ்கடர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Travel Expo 2025

தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2025 ரோடு ஷோ... செப்.26-ல் மதுரையில் தொடக்கம்

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும், "தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ 2025", செப்டம்பர் 26 முதல் 28-ஆம் தேதி வரை மதுரையில் உள்ள ஐ.டி.ஏ. ஸ்கடர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, 2வது முறையாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்து, சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் பங்குதாரர்களின் லாபத்தை மேம்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா வலையமைப்புத் தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 300-க்கும் மேற்பட்ட வாங்குவோர் (Buyers) மற்றும் 400-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்துகொண்டு நேரடியாகத் தொடர்புகொள்ளும் வாய்ப்பைப் பெற உள்ளனர். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், நலவாழ்வு மையங்கள், மருத்துவ சுற்றுலா நிறுவனங்கள், சுற்றுலா வாரியங்கள், சங்கங்கள் எனப் பல தரப்பினர் இதில் பங்கேற்க உள்ளனர்.

கடந்த ஆண்டு பங்கேற்றவர்களுக்குக் கிடைத்த நல்ல வணிக வாய்ப்புகளைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் ஸ்டால் கட்டணத்தில் சலுகை விலையை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் இரண்டு பாஸ்கள் வழங்கப்படும் என்றும், அதில் தொடக்க விழா, இரண்டு நாள் வணிக அமர்வுகள், விருந்துகள் மற்றும் மதிய உணவுகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை டிராவல் கிளப், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் தென் இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஸ்டால் மற்றும் டேபிள் ஸ்பேஸுக்கும் 2 பாஸ் வழங்கப்படும். இதில் துவக்க விழா, இரண்டு நாள் வணிக அமர்வுகள், நெட்வொர்க்கிங் டின்னர்கள் மற்றும் மதிய உணவுகள் அடங்கும். இந்த ஆண்டில் 200 கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் ஹோட்டல்கள், ரிசார்ட்கள், ஹோம்-ஸ்டேக்கள், நலக்குழந்தை மையங்கள், மருத்துவ டூரிசம், டெஸ்டினேஷன் கியுரேட்டர்கள், திருமண இடங்கள், டூரிசம் வாரியங்கள், சங்கங்கள் மற்றும் பிராந்திய DMC-க்கள் அடங்கும். 450 மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பதால் தமிழ்நாடு டிராவல் எக்ஸ்போ தென் இந்தியாவின் மிகப்பெரிய டூரிசம் நெட்வொர்க்கிங் தளமாக அமைகிறது என்றனர்.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: