தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை திருநாளில் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த நாளில் அறுவடை செய்த புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியன், கால்நடை ஆகியவற்றிக்கு படைப்பது தமிழர்கன் பண்பாடு. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல் நாளில் மக்கள் இந்திரனை (மழையின் கடவுள்) வணங்குகிறார்கள்.
திருவிழாவின் இரண்டாவது நாளில், சூரிய பகவானை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது, இது கால்நடைகளுக்கு சிறப்பிக்கப்படுகிறது. நான்காவது நாள் 'காணும் பொங்கல்', இதில் மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியான தருணங்களை பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல் பொங்கல் தினத்தில் விதவிதமாக பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு படைப்பாளார்கள். அந்த வகையில் பால் பொங்கலும் பலகாய் குழம்பும் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்
பால் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
பால் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 6 கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
பால் பொங்கல் செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், ஒரு கப் பால் மற்றும் 6 கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொத்தித்தவுடன், நன்றாக கழுவிய பச்ச அரிசியை அதில் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அரிசி நன்றாக கொழைந்து வரும் வரை வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்தவிட்டு, பொங்கல் அடி பிடித்துவிடாமல் இருக்க இவ்வப்போது கரண்டியை வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான பால் பொங்கல் தயார்.
பலகாய் குழம்புக்கு தேவையான பொருட்கள்
துரவரம்பருப்பு - 200 கிராம்
பலவகை காய்கறிகள் – ஒன்னறை கிலோ
பெருங்காயம் – சிறிதளவு (கட்டி)
பச்சை மிளகாய் – 5
சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
சாப்பார் பொடி - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒன்னறை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் தாளிக்க தேவையான பொருட்கள்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன் (தேவையானால்)
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் துவரம்பருப்பை நன்றாக கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன், அதில் பல காய்கள், முருங்கைக்காய், அவரைக்காய், பூசனிக்காய், கத்தரிக்காய் முள்ளங்கி, என உங்களுக்கு பிடித்த காய்களை சேர்த்துக்கொள்ளலாம். அதன்பிறகு காயில் கட்டி பெருங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 5 பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் சின்னவெங்காயம் 2 கைப்பிடி அளவு, சாப்பார் பொடி 4 டீஸ்பூன், மிளகாய் தூள் ஒன்னறை டீஸ்பூன், மல்லித்தூள் 3 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் வெந்துகொண்டிருக்கும காயில், 4 பெடியாக நறுக்கிய 4 தக்காளியை சேர்த்தக்கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவல் சீரகம் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்தபின் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு காய் முக்கால் பதம் வெந்தபிறகு அதில் புளி கரைசலை சேர்த்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அடுப்பு அனல் கொஞ்சமாக வைத்து காய் முழுவதையும் வேக வைக்கவும். அதன்பிறகு ஒரு பானில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி, இறுதியாக காய் குழப்பில் சேர்த்துக்கொள்ளவும். கடைசியில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பலகாய் குழம்பு தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.