Advertisment

’சீப்பு இல்லன்னா கல்யாணம் நின்னுடும்’: ’ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி

”என்னோட சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் கூட நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது”

author-image
WebDesk
New Update
Vijay TV Eeramana Rojave Saai Gayatri

ஈரமான ரோஜாவே சாய் காயத்ரி

Eeramana Rojave Saai Gayatri: படம் / சீரியல் என நடிப்பில் பிஸியாக இருந்தாலும், தங்களது படங்களை இணையத்தில் உலவ விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நடிகைகள். அதில் முக்கியமான ஒருவர் நடிகை சாய் காயத்ரி.

சினிமாக்களில் பணிபுரிந்து வந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை இணையத்தில் உலவ விட்டு வருகிறார். சீரியலில் இருப்பதுபோலவே இணையதளத்திலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. குடும்பப் பாங்கான முகம் இவரை இன்னும் பிரபலப்படுத்தியுள்ளது.

,

’சிவா மனசுல சக்தி’ சீரியலில் அறிமுகமானவர் சாய் காயத்ரி. மதுரைக்கார பெண். அதில் ரொம்பப் பெருமை அவருக்கு. மதுரையில் ஹையர் செகண்டரி வரைக்கும் முடித்துவிட்டு சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார். படித்துக்கொண்டிருக்கும்போதே மாடலிங்கில் இறங்கி, அதன் மூலமாக காயத்ரிக்கு சீரியலில் வாய்ப்பு வந்திருக்கிறது.

,

நடிக்க ஆரம்பித்ததும் அவரது குடும்பமும் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து இருக்கிறது. ஜாலியான கலகலப்பான குடும்பத்தில் இவர் ரொம்பவே செல்ல பிள்ளையாம். அம்மாவிடம் தான் தன்னுடைய கோபத்தை காட்டுவாராம் காயத்ரி. எந்த டென்ஷன் இருந்தாலும் அம்மாவை திட்டி விட்டு,  சிறிது நேரத்தில் எதுவுமே நடக்காதது போல வந்து பேசி விடுவாராம்.

,

காயத்ரியுடன் எப்போதும் இருக்கும் பொருட்களில் முக்கியமானது சீப்பு. அடிக்கடி தலையை சீவி கொண்டே இருக்கும் பழக்கத்தை காயத்ரியால் மாற்றவே முடியவில்லையாம். அதனால் சீப்பு இல்லாமல் காயத்ரியால் இருக்க முடியாதாம். ”என்னோட சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் கூட நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று அவரே ஒருமுறை ஜாலியாக கூறியிருக்கிறார். அதோடு ஸ்பாட்டில் கூட நடிப்பவர்களையும் கலாய்த்து ஒருவழியாக்கி விடுவாராம்.

,

எப்போதும் ஜாலியாக இருக்கும் குணமுடைய இவருக்கு, கூட இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்திருப்பது காயத்ரிக்கு பிடித்த ஒன்றாம். அவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொகுப்பாளரும் கூட. ஜெயா டிவி, ஜீ தமிழ் டிவி, ராஜ் டிவி-களிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் முதன்முதலில் ’கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை’ சீரியலில் தான் அறிமுகமாகியிருக்கிறார்.

,

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நேர்த்தியான உடைகளில் விதவிதமாக அலங்காரம் பண்ணிக் கொண்டு காயத்ரி பதிவிடும் படங்கள் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறதாம். மதுரைத் தமிழில் படபடவென்று பேசி பக்கத்து வீட்டு பெண் போல உணர வைக்கிறார்.

,

உடல் கவர்ச்சியில் இல்லை அழகு. நல்ல பேச்சிலும் நமது பார்வையிலும் தான் எல்லாமே இருக்கிறது என்பதை ஆணித் தனமாக நம்புகிறார். சின்னத்திரையை தொடர்ந்து, பெரிய திரையிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதே, சாய் காயத்ரியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment