திருவேற்காடு அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன், போதை இல்லா சமூகம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.
சென்னை திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவன் சுகன். 6வயதான இவர், சிலம்பம் மீது இருந்த ஆர்வம் காரணமாக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதில் சாதிக்க வேண்டும் என துரோணா யோகா எனப்படும் மூன்றாம் கண் யோகாவை கற்று வந்துள்ளார்.
கண்களை மூடுக் கொண்டாலும் உணர்வுகளை கொண்டு பார்க்கும் ஒரு வித யோகா பயிற்சி அது இதனை கற்றுக் கொண்ட சிறுவன் சுகன் தனது இரு கண்களையும் இருக்க கட்டிக் கொண்டு தனது எதிரே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் பொருட்கள் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து வருகிறார். அந்த வகையில் யோகவையும் சிலம்பத்தையும் வைத்து போதைப் பொருள் தடுப்பு குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு காற்றில் சிலம்பம் சுற்றி இந்திய நாட்டில் உள்ள 28 மாநிலங்களை சரியாக கண்டெடுத்து அவர் தெரிவித்தார். இது சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. போதைப்பொருள் இல்லாத இந்தியா எனும் விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த சாதனையை சிறுவன் படைத்துள்ளார். இந்த நிகழ்வு வின்னர்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதற்கான சான்றுகளும் பதக்கம் சிறுவனுக்கு வழங்கப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/silam-830079.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் சுகன், "எனது கண்ணில் துணியை கட்டிக் கொண்டதால் என்னால் பார்க்க முடியாது. இருந்தாலும் மூன்றாம் கண் யோகா பயிற்சி செய்து பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். அதற்கு எனது பயிற்சியாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போதை இல்லாத இந்தியா எனும் விழிப்புணர்வை வலியுறுத்தி இந்த சாதனையை படைத்தேன்" என்று கூறினார்.
பயிற்சியாளர் தீபா பேசும்போது, "உலகில் யாரும் செய்யாத இளம் வயதில் இந்த சாதனையை சுகன் படைத்திருக்கிறார். போதை இல்லாத இந்தியா எனும் விழிப்புணர்வை வலியுறுத்தி அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். கண்ணை கட்டிக்கொண்டு யோகா பயிற்சி மூலம் மூன்றாம் கண் வழியாக இந்தியாவின் 28 மாநிலங்களின் தலைநகர்களை சிலம்பத்தால் தொட்டு அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
சிறுவனின் தாய் ஆஷா பேசும்போது, "எனது மகன் நான்கு வயதிலிருந்தே சிலம்பம் பயிற்சியும் யோகா பயிற்சியும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்திய மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை சரியாக சொல்லுவார். இதை வைத்து ஏதாவது சாதனை புரியலாம் என்று சிந்தித்தோம். அந்த வகையில் கடந்த ஒரு வருடம் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார். போதை விழிப்புணர்வுக்காக அவர் இந்த சாதனையை படைத்திருப்பது பெருமையாக உள்ளது. இந்த சாதனையை படைக்க உதவியாக இருந்த பயிற்சியாளர் தீபாவிற்கும் நன்றி" என்று தெரிவித்துக் கொண்டார்.