New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/WiX8nAbthBYOuEJHAjx5.jpg)
தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால், ஏழை மக்கள் திருமணத்திற்கு தங்கத்தில் தாலி வாங்க முடியாத நிலமை இருக்கிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில், விரலி மஞ்சளில் தாலியை செதுக்கி துயரத்தை கோவை வடிவமைப்பாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் தங்கத்தின் பங்குகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் தங்களது செல்வாக்கை காட்டும் விதமாக வீட்டு சுப நிகழ்ச்சிகள் முதல் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு தங்கம் அணிந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனிடையே ஏழை எளிய மக்கள் திருமணத்தின் முக்கிய பங்காக இருக்கும் தாலியை தங்களுக்கு ஏற்ப நகை கடைகளில் வாங்குவது வழக்கம்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் திருமணத்திற்கு தங்கத்தில் தாலி வாங்குவது எட்டாக்கனியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தற்போது திருமணத்தின் போது வெறும் மஞ்சள் கயிறும், மஞ்சள் கொம்பும் கட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகைய துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதி சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா விரலி மஞ்சளில் தாலியை செதுக்கி வடிவமைத்துள்ளார்.
இனி வரக்கூடிய நாட்களில் மஞ்சள் கொம்பில் மாங்கல்யம் கட்டும் நிலைமை ஏற்படும் என அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.