குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்ற முயற்சி: கோவையில் புதிய திட்டம் தொடக்கம்

காஃபி ஷாப்,நெசவு நிலையம் மற்றும் இசை என பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் துவங்கப்பட்டுள்ள சஹா மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார்..

காஃபி ஷாப்,நெசவு நிலையம் மற்றும் இசை என பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் துவங்கப்பட்டுள்ள சஹா மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார்..

author-image
WebDesk
New Update
Coimbator

உலகளவிலும், இந்திய அளவிலும், சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக சஹா மையம் முதன்முறையாக தமிழகத்தில் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது,

Advertisment

மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளோர் ஒருங்கிணைந்து - நெசவு நிலையம் மற்றும் காஃபி ஷாப் நடத்த உள்ள இந்த மையம்  ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. கோவையில் சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் கௌமாரம்  பிராசந்தி அகாடமி இந்தியாவிலேயே முதன் முறையாக சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் புதிய முயற்சியாக கோவையில் சஹா எனும் ஒருங்கிணைந்த மையத்தை துவக்கி உள்ளனர்.

காஃபி ஷாப்,நெசவு நிலையம் மற்றும் இசை என பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் துவங்கப்பட்டுள்ள சஹா மையத்தை கோவை  மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார்.. இது குறித்து கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் இயக்குனர் தீபா மோகன்ராஜ் கூறுகையில், சிறப்புத் தேவைகள் உள்ள நரம்பியல் குறைபாடு உள்ளோர் என 18 வயதிற்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சுயசார்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கி, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சுயசார்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையத்தை துவங்கி உள்ளது.

இந்த சஹா ஒருங்கிணைந்த மையம் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்களால் நிர்வகித்து நடத்த உள்ள இந்த மையம் உலகிலேயே  முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சஹா மையம் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து ஐன்ஸ்டீன் உலக சாதன சான்றிதழை சிறப்பு குழந்தைகளுக்கு  புத்தகத்தின் இயக்குனர் மோனிகா வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: