கோவையில் இளைஞர் ஒருவர், 7 மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரி மலை தொடரை தொடர்ந்து 101 வது நாளாக ஏறி இறங்கி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. 7 மலை தொடர்களை கொண்ட இதில் 7-வது மலையில்,சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளதால் வெள்ளியங்கிரி மலை சிவபெருமானின் ஏழுமலை என்றும் தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கோயிலுக்கு செல்வது பெரும் சவாலாகவே பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இந்த மலையை தொடர்ந்து 108 முறை ஏறும் உலக சாதனை முயற்சியில் கோவையை சேர்ந்த மலையேற்ற பயிற்சியாளர் ஹரி என்பவர் மேற்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் துவங்கி தினமும் சுமார் 6 கிலோ மீட்டர் ஏழு மலை தொடர்களில் ஏறி வரும் இவர் தற்போது தனது சாதனை முயற்சியல் 101 வது முறையாக வெள்ளியங்கிரி மலையேறி இறங்கியுள்ளார்..
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். சாதரணமாக மலையேறி இறங்க சுமார் 6 மணி நேரம் ஆகும் நிலையில் 2 மணி நேரத்தில் ஏழு மலைத்தொடர்களை ஏறி இறங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
சாதரணமாக மிகவும் சவாலான இந்த மலையேற்றத்தில் மலையில் ஏறுவது மிகவும் சுலபமாக இருந்தாலும், இறங்குவது மிகவும் கடினம். ஆனால் தொடர்ந்து 101 முறை ஏறி இறங்கி உள்ள ஹரியின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.