மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்
கடலூர் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs), ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLFs), வட்டார அளவிலான கூட்டமைப்புகள் (BLFs), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRCs) மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs) பகுதி அளவிலான கூட்டமைப்புகள்(ALFs), நகர அளவிலான கூட்டமைப்புகளுக்கு (CLFs) மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை (Rural) சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,00,000/- ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000/- வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000/- கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000/- நகரப் பகுதிகளை (Urban) சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000/- பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000/- நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000/
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000/- ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000/- கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000/- நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000/- பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000/- மும் வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் விண்ணப்பங்களை 30.04.2025-க்குள் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு 30.04.2025-க்குள் மணிமேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன்