இந்தியாவில் 75 சதவீத சிறுநீரக தானம் பெண்களால் வழங்கப்படுவதாக டாக்டர். ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆண்டுதோறும் 2 லட்சம் பேருக்கு சிறுநீரகங்கள் தேவைப்படும் வேளையில் வெறும் 10,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. இந்தியாவில் உயிரோடு இருப்பவர்களிடம் இருந்து பெற்று நடக்கும் 70-75 % சிறுநீரக தானங்கள் - பெண்களால் கொடை அளிக்கப்பட்டவையாய் இருக்கின்றன என்பது பாராட்டுதற்குரிய விசயம்.
நாள்தோறும் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழப்பால் மக்கள் மரணமடைந்து வருகிறார்கள். உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒரு நபர் - மருத்துவமனையில் இறந்திருந்தால் அவர் மூளைச்சாவு அடைத்து விட்டார் என்று மருத்துவக் குழு இருமுறை சான்றழித்த பிறகு அவரது நெருங்கிய உறவினரின் ஒப்புதலுடன் மட்டுமே அந்த நபரிடம் இருந்து உறுப்புகளைக் கொடையாகப் பெற முடியும்.
மூளைச் சாவு என்றால் என்ன?
மரணமடைவது என்பது இதயம் தனது வேலையை நிறுத்திக் கொள்வது. அதுவே சாலை விபத்துகளில் தலையில் அடி பட்டு, மூளை ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு, இதய ரத்த நாள அடைப்பு அல்லது செயல் முடக்கம் ஏற்பட்டு, விரைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, மருந்துகள் தரப்பட்டு இதயமும் நுரையீரலும் பணியை செய்து கொண்டிருக்கும். இவர்கள் "மூளைச்சாவு" ஏற்பட்டவர்களாவர். இவர்களின் உறவினர்களின் ஒப்புதலோடு முக்கிய உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு பொருத்த முடியும்
ஒருவரின் உறுப்புக் கொடை மூலம் 9 பேர்கள் பலன் அடைவார்கள். அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு சிறுநீரகங்கள். ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் இருவரின் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும்.
கல்லீரல்
இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும். உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.
நுரையீரல்
இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும். உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும்.
இதயம்
இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும்.
கணையம்
உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும். இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும்.
குடல்
இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம். விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும் கொடையாக வழங்கப்படும். தோல் தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும். தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்.எம். இக்பால், கன்னியாகுமரி