/indian-express-tamil/media/media_files/2025/01/24/rtFx3vmriUCXqlbxx07K.jpg)
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு விழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது அதன் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி ரத வீதிகளில் தேரோட் டம் மற்றும் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா கோலாகல மாக நடைபெற இருக்கிறது. திருவிழாவையொட்டி 10 நாட்களும் இரவில் தினமும் ஒரு வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானை யுடன் எழுந்தருளி நகர் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த விழாவை முன்னிட்டு ஜி.எஸ்.டி. டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவுக்காக முரு கப்பெருமான்-தெய்வானை எழுந்தருளியக்கூடிய தெப்ப மிதவை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.