Advertisment

சட்டம் முதல் துப்பாக்கி சுடுதல் வரை; தீவிர பயிற்சியில் புதிய காவலர்கள்

தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காவலர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது; கோவையில் 3 மாவட்ட காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்

author-image
WebDesk
New Update
Kovai police training

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிய உள்ள காவலர்கள் கோவை பி.ஆர்.எஸ் பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Advertisment

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேருக்கும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 74 பேருக்கும் என 180 இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அவர்களுக்கு கவாத்து கராத்தே, நீச்சல், சட்டம் பயிற்சி, ஐ.பி.சி (IPC), சி.ஆர்.பி.சி (CRPC), துப்பாக்கி சூடுதல், எப்படி துப்பாக்கியை கையாள்வது, துப்பாக்கி சுடுவது, ஒரு கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி இருக்கின்றனர்.

Advertisment
Advertisement

அதனைத் தொடர்ந்து ஏழு மாதம் பயிற்சியும் மற்றும் ஒரு மாதம் செய்முறை பயிற்சி என 8 மாதம் பயிற்சிகள் பயிற்சி காவலர்களுக்கு அளிக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து லோக்கல் பட்டாலியன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு எட்டு மாதம் பயிற்சிக்கு பிறகு பரைட் அணிவகுப்புடன் பயிற்சி நிறைவடைந்து சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Police kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment