/indian-express-tamil/media/media_files/2025/08/20/trichu-2025-08-20-22-40-53.jpg)
உலக நாடுகளில் பென்டகன், புஜ் கலிப்பா, இந்தியாவில் முக்கிய பகுதிகள் ஹைதராபாத் விமான நிலையம் உள்ளிட்டவைகளுக்கு கொடுக்கப்பட இயற்கை பாதிப்பு ஏற்படுத்தாமல் நீர் மின்சாரம் ஆகியவற்றை சேமித்து பெற்றுள்ள உயரிய பசுமை சான்றிதழை திருச்சி மா காவேரிக்கு ஜிபிசிஐ (GBCI) வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இந்த பசுமை சான்றிதழை பெற்றிருந்தாலும் திருச்சி மா காவேரி நிறுவனம் பசுமை சான்றிதழ் பெற்றுள்ளது. ஜிபிசிஐயின் பசுமை சான்றிதழ் காவேரி மருத்துவமனை குழுமத்தின் திருச்சி மா காவேரிக்கு கிடைத்துள்ளது குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் செங்குட்டுவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மா காவேரி மருத்துவமனையில் நீர்வளம் மின்சாரத்தை சேமிக்கிறோம். இயற்கை வழியில் சோலார் மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இயற்கையை பாதுகாக்கிறோம். நீரை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து அதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான நீரை நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம். இவைகளை முறையாக மா காவேரி மருத்துவமனை கடைப்பிடித்ததன் மூலமாக பசுமை கிடைத்துள்ளது. சான்றிதழ் மூலம் மா காவேரி தரத்திற்கும் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளது பெருமைபட வேண்டியது என தெரிவித்தார்.
பசுமை சான்றிதழை, ஜிபிசிஐ தென்கிழக்கு ஆசியா மற்றும் நடுத்தர கிழக்கு சந்தைகளுக்கான மேலாளர் கோபால்கிருஷ்ணன், காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் . காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் செங்குட்டுவன் ஆகியோர்களுக்கு வழங்கினார். இதன் மூலம், காவேரி மருத்துவமனை, மருத்துவத் துறையில் ஒரு சாதனைகளையும் விருதுகளையும் பெற்று தற்போது இயற்கையை பாதுகாத்து மனித வளத்தை காக்க பசுமை சான்றிதழை சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.