Tasty Vendakkai Puli Kuzhambu Recipe Tamil news : எப்போதும் ஒரே போன்ற சாம்பார், ரசம் என வைத்து சலித்துப்போனவர்களுக்கு, புளிக்குழம்பு சரியான ஆப்ஷன். அதிலும் வெண்டைக்காய் சேர்த்து செய்யும்போது அதன் சுவையே தனியாக இருக்கும். புளிப்பு, இனிப்பு மற்றும் காரம் அனைத்தும் சேர்ந்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபியை இனி பார்க்கலாம். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம்.
தேவையான பொருள்கள்
காய்கறி வறுக்க
வெண்டைக்காய் - 250 கிராம்
கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மசாலாவிற்கு
எள் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 5 பற்கள்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 1 கப்
துருவிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
மற்ற பொருள்கள்
எள் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - 1 சுண்ணாம்பு அளவு
புளியை ஊறவைக்க 2 கப் வெந்நீர்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் / சாம்பார் தூள் - 1.5 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை
முதலில், வெண்டைக்காயை எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வறுக்கவும். பாதி வேகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் குழம்புக்குத் தேவையான மசாலா பேஸ்ட் செய்யலாம். அதற்கு, எண்ணெயை சூடாக்கி சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு தக்காளியைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
இதனோடு, துருவிய தேங்காய் சேர்க்கவும். இதனை இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
இதையடுத்து கடாயை அடுப்பிலிருந்து நீக்கி, இந்தக் கலவையை மென்மையான பேஸ்டாக அரைக்கவும். அரைக்க சிறிது தண்ணீர் (அரை கப்) சேர்க்கவும்.
ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை இரண்டு கப் தண்ணீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, விதைகள் மற்றும் மற்ற குப்பைகளைப் பிரித்தெடுத்து, கரைசலை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு தனி கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்தபிறகு, அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
புளி சாறு, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் சிறிது வெல்லம் அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்க்கவும்.
ஒரு கப் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடாயை ஒரு மூடி போட்டு மூடி, குறைந்த தீயில் 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதில் சமைத்த வெண்டைக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
குழம்பின் மேல் எண்ணெய் மிதக்க வேண்டும். அதுதான் குழம்பு சமைத்து முடிந்தது என்பதற்கான உண்மையான அறிகுறி. அவ்வளவுதான் இதனை சாதத்துடன் சூடாகப் பரிமாறி மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil