மல்லிகை விரும்பாத பெண்கள் உண்டா? என்னதான் மேக்கப் செய்து, நகைகள் அணிந்தாலும் புடவை, மல்லிகை பூவை விட பெண்களுக்கு பேரழகு தரும் எதுவும் இல்லை.
Advertisment
உங்கள் வீட்டில் மல்லிகைச் செடி வளர்க்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் மல்லிகை செடியில் நிறைய அரும்புகள் பிடித்து பூக்கள் பூக்க, எந்த மாதிரி உரம் கொடுக்கலாம் என்பது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்..
பெரிய வெங்காயம் தோல்ல கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, அயோடின், சல்பர் சத்து எல்லாமே இருக்குது. இந்த வெங்காயத் தோலை செடிகளுக்கு மூடாக்காப் பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
ஒரு டப்பாவுல ஒரு கைப்பிடி வெங்காயத்தைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் மூடி வெச்சிடணும். அடுத்த நாள் எடுத்துப் பார்த்தா, தண்ணி காபி கலர்ல மாறி இருக்கும். அதைத் துணி மூலமா வடிகட்டி வாரம் ஒரு முறை, அந்தத் தண்ணியை செடிகளுக்கு ஊற்றலாம். அதனால் செடிகள்ல தண்டு வளர்ச்சி அபரிதமாக இருக்கும். மற்ற பகுதிகளோட வளர்ச்சியும் நல்லா இருக்கும்.