தை அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபடுவதற்கு முக்கிய நாளாகும். மகாளய அமாவாசையில் நமக்கு ஆசி வழங்குவதற்காக பித்ரு லோகத்தில் இருந்து, பூமிக்கு வரும் முன்னோர்கள், தை அமாவாசை அன்று மீண்டும் பித்ருலோகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது.
தை அமாவாசை முன்னோர் வழிபாடு, தானம் தர்மங்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும். தை அமாவாசை அன்றுதான் அபிராமி, அமாவாசை அன்று பெளர்ணமி நிலவை காட்டினார். அதனால் இந்த நாளில் விரதம் இருந்து, புனித நீராடினால் பாவங்கள் நீங்கும்.
விரம் பற்றி
பொதுவாகவே அமாவாசை நாளில் நம்முடைய முன்னோர்கள் நம்மை காண்பதற்காக நம்முடைய வீடு தேடி வரக்கூடியநாள் என்பார்கள். அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் நம்முடைய வீடு தேடி வரும் நம்முடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை செய்யாமல் இருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் நமக்கு பித்ரு சாபமாக மாறும்.
பித்ரு சாபம் இருக்கும் ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் தள்ளிப்போகும், தீராத நோய், மன வேதனை, கடன் பிரச்சனை, குழந்தை பிறப்பது தள்ளிப்போவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
தை அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த, படையலிட்டு , தானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். இதனால் நம்முடைய முன்னோர்கள் மனம் மகிழந்து ஆசிர்வாதம் செய்வார்கள். ஜாதகத்தில் நம்முடைய பாக்கிய ஸ்தானம் பலப்படும். இதனால் நம் எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“