Advertisment

தஞ்சாவூர் ஸ்பெஷல் அடையை செய்து பாருங்க: டேஸ்ட் சூப்பரா இருக்கும்

தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை அடையை நீங்கள் எளிதாக செய்ய முடியும். வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக இந்த அடையை நாம் சமைத்து சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
food

தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை அடையை நீங்கள் எளிதாக செய்ய முடியும். வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக இந்த அடையை நாம் சமைத்து சாப்பிடலாம்.  

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி

கால் கப் உளுந்து

கால் கப் கடலை பருப்பு

கால் கப் துவரம் பருப்பு

கால் கப் புழுங்கல் அரிசி

தேவையான அளவு உப்பு

அரை ஸ்பூன் கடுகு

அரை ஸ்பூன் சீரகம்

இஞ்சி நறுக்கியது

பச்சை மிளகாய் நறுக்கியது

செய்முறை : பச்சரிசி, உளுந்து, கடலை பருப்பு, புழுங்கல் அரிசியை நன்றாக கழுவ வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு, சீரகம், இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். தொடர்ந்து அதை மாவில் கொட்டவும். ஒரு குழியான சட்டியை எடுத்துகொள்ளவும். அதில் சிறிய அளவில் எண்ணெய் ஊற்றவும். தொடர்ந்து அதில் மாவு ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment