இப்படி செய்தால் தட்டை செய்ய வெறும் அரை மணி நேரம் போதும். ரொம்ப சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
2 கப் பச்சரிசி மாவு
2 ஸ்பூன் உளுந்து மாவு
கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
½ ஸ்பூன் மிளகாய் தூள்
1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த கடலை பருப்பு( ஊறவைத்தது)
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் பட்டர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துகொண்டு வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து உளுந்தையும் வறுத்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சரிசி மாவு, கடலை பருப்பு, அரைத்த உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், பட்டர், சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் கவரை இரண்டாக வெட்டி, மாவின் ஒரு உருண்டையை வைத்து அதன் மீது வட்டமான பாத்திரம் வைத்து தட்டை போல் செய்யவும். இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“