/indian-express-tamil/media/member_avatars/2025/03/15/2025-03-15t100634324z-sundar.jpg )
/indian-express-tamil/media/media_files/2025/06/25/koomapatti-2025-06-25-13-30-00.jpg)
கூமாபட்டி கிராமத்தின் அழகையும், அதன் சிறப்புகளையும் விளக்கி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை ஒருவர் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோக்களில், "ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்... நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... ஏங்க... மன அழுத்தமா? காதல் பிரச்னையா? மனசு சரியில்லையா? என்ன பிரச்னையாக இருந்தாலும் கூமாபட்டி வாங்க..." போன்ற வசனங்களுடன், கிராமத்தின் ரம்மியமான காட்சிகளைப் பதிவிட்டுள்ளார்.
ஏங்க.. தமிழ்நாட்டுலே இப்படி ஒருஊர் இல்லை, பசுமை தீவு என்று இன்ஸ்டாகிராமில் வசனங்களுடன் கூமாபட்டி தீவு பற்றிதான் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் காரணமாக, கூமாபட்டி கிராமம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, விரைவாக லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன
அப்படி என்ன இருக்கு அந்த ஊரில்? இணையத்தில் இப்போது கூமாப்பட்டி என்ற கிராமம் பற்றியத் தகவல்கள்தான் பரவிக் கொண்டு இருக்கு. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கூமாபட்டி. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இடையே அழகிய இயற்கை காட்சிகளுடன் கூமாபட்டி கிராமம் உள்ளது.
இந்த ஊருக்கு அருகே பிளவாக்கல் அணை உள்ளது. அங்கு நீர் காட்சி, பசுமை சாலைகள், இயற்கை சூழல் ரசிக்கும்படி இருக்கும். அங்கிருக்கும் இயற்கை காட்சிகள் ரொம்ப அமைதியானதும், அழகானதும்தான். இயற்கையோடு கலந்த நல்ல இடம் எனலாம். இயற்கையை நேசிப்பவர்கள், அமைதியான இடங்களை விரும்புறவர்கள், நண்பர்களுடன் கூமாபட்டிக்கு ஒருமுறை போய் பார்த்துவிட்டு இயற்கையான சூழலை ரசித்துவிட்டு வரலாம். பயணிக்கிறதுக்கு முன்னாடி எப்போதும் பேருந்து வழிகள், அருகிலுள்ள இடங்களைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டு திட்டமிட்டு செல்லலாம்.
கூமாபட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கொண்டுள்ளது. நகர வாழ்க்கை யின் பரபரப்பில் இருந்து விலகி, அமைதியான கிராமிய சூழலை விரும்புபவர்களை இந்த வீடியோக்கள் கவர்ந்துள்ளன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு அதிக செலவு செய்யாமல், அருகிலேயே ஒரு அழகான இடத்தைப் பார்க்க முடியும் என்ற எண்ணம் பலரை ஈர்த்துள்ளது.
இயற்கையை ரசிக்க, அமைதியை உணர, கூமாப்பட்டி ஒரு நல்ல இடம் கூமாபட்டி. அக்கிராமத்து இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் இயற்கை எழில் சூழ்ந்த கூமாபட்டி தீவுக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்துவிட வேண்டும் என்று பெருமையாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், டிராவலர்கள், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என கூட்டம்கூட்டமாக கூமாபட்டி கிராமத்துக்கு படையெடுத்து வருகின்றனர். கூமாபட்டி கிராமத்திற்கு ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இது எதிர்காலத்தில் அப்பகுதியின் சுற்றுலாத் துறைக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூமாபட்டி உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், அண்மையில் அங்கு வெறிநாய் கடித்து 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கூமாபட்டியில் வெறிநாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற மக்களை விரட்டி விரட்டிக் கடித்துக் குதறியது. நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோரை கடித்து மரண பயம் காட்டிய அந்த வெறி நாய் பிடிக்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.