/tamil-ie/media/media_files/uploads/2018/03/01moon-master768.jpg)
அடுத்தாண்டு முதல் நிலாவில் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் செல்ஃபோன் பயன்படுத்தவே நெட்வொர்க் கிடைக்காமல், அந்தந்த நெட்வொர்க் நிறுவனங்கள் முன்பு மக்கள் போராட்டம் நடத்தும் நிலைமை உருவாகியுள்ளது. அதிலும், ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறி, அதனை மூடும் நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4ஜி சேவையை நிலாவில் வழங்க திட்டமிட்டு வருகிறது வோடஃபோன். அதற்காக, லூனார் ஊர்தியை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளில் ஆடி லுனார் க்வார்டோ ஊர்தி ஈடுபட்டு வருகின்றது. இந்த ஊர்தியின் உதவியுடன் தகவல்கள், எச்டி வீடியோவை உலகத்துக்கு அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு இணைய சேவையை வழங்க உள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.