/indian-express-tamil/media/media_files/tirupathi-12.jpg)
திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம் மோற்சவத்திற்கு பி.ஆர்.டி.சி., சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பி.ஆர்.டி.சி., மேலாளர் (போக்குவரத்து) சிவா னந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பதியில் நடைபெறும் புராட்சி மாத பிரம்மோற்சவத்தையொட்டி பி.ஆர்.டி.சி., சார்பில் இன்று (17 ம் தேதி) முதல் அக்டோபர் 19ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ் தினசரி இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். திருப்பதியில் இருந்து காலை 7:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் ரூ.300 ஆகும். ஏற்கனவே புதுச்சேரியில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.