ஆதரவற்ற பிணங்களுக்கு நல்லடக்கம்: திருவாவடுதுறை ஆதீன விழாவில் சமூக சேவகர் விஜயகுமாருக்கு "மனித நேய மாமணி" விருது

திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் விஜயகுமாருக்குப் பொன்னாடை போர்த்தி, உருத்திராட்ச மாலை அணிவித்து, பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் மனித நேய மாமணி விருதை வழங்கினார்.

திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் விஜயகுமாருக்குப் பொன்னாடை போர்த்தி, உருத்திராட்ச மாலை அணிவித்து, பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் மனித நேய மாமணி விருதை வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவில், சமூக சேவகர் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு "மனித நேய மாமணி" விருது வழங்கப்பட்டது. இலவச நூலகம் அமைத்து அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும், உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்வதற்கும் அவர் ஆற்றி வரும் உன்னத சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

Advertisment

திருவாவடுதுறை ஆதீனம் தலைமை மடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் விஜயகுமாருக்குப் பொன்னாடை போர்த்தி, உருத்திராட்ச மாலை அணிவித்து, பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் மனித நேய மாமணி விருதை வழங்கினார்.

விருதைப் பெற்ற விஜயகுமார் தனது சமூகப் பணிகள் குறித்துப் பேசுகையில், இருபத்தைந்து ஆண்டுகளாகத் தனது வீட்டின் முகப்பிலேயே இலவச நூலகம் நடத்தி வருவதாகவும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இலவச நூலகத்தின் சிறப்பு

Advertisment
Advertisements

விஜயகுமார் நடத்தி வரும் இந்த இலவச நூலகம் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு நூலகர் கிடையாது, இணைவதற்கு கட்டணம் கிடையாது. யார் வேண்டுமானாலும் வந்து புத்தகங்களைப் படிக்கலாம். "புத்தகங்கள் இல்லாத வீடு சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது" என்ற கூற்றை மேற்கோள் காட்டிய அவர், நூலகங்கள் மக்களை மேன்மக்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்றார்.

ஆரம்பத்தில் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதி இருந்ததாகவும், ஆனால் சிலர் நூல்களைத் திருப்பித் தராததால் தற்போது நூலகத்திலேயே படித்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகுமார் தெரிவித்தார். நூலகர் இல்லாத நிலையிலும், கட்டணமில்லாமல் அனைவருக்கும் புத்தகம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 25 ஆண்டுகளாகப் படிப்படியாக 25,000 புத்தகங்களுடன் இந்த நூலகம் வளர்ச்சி பெற்றுள்ளது.

நூலகத்தில் கல்விசார் புத்தகங்கள், சிறுவர், இளைஞர், மகளிர், சட்டம், சமயம், தத்துவம், மருத்துவம், இலக்கியம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலம் போன்ற பல்வேறு பிரிவுகளில் நூல்கள் உள்ளன. பயனர்களுக்கு நீர், மின்சாரம், மின்விசிறி, இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க தனது வாழும் வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளார் விஜயகுமார்.

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் மனித நேயப் பணி

இலவச நூலகப் பணியுடன், திருச்சியில் மயான பூமியில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் விஜயகுமார் தனது மனைவி மற்றும் மகளுடன் ஈடுபட்டு வருகிறார். பெயர், விலாசம் தெரியாத உடல்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது ஒரு புனிதப் பணி என்று அவர் கருதுகிறார்.

இந்தச் சேவையைச் செய்யும்போது பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் இது ஒரு மகன், மகள் அல்லது பேத்தி இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கருதி தாம் இதைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாகவும், மேலும் 25 முறைக்கும் மேலாக ரத்ததானம் செய்துள்ளதாகவும் விஜயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

"வாழ்நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம்" என்ற உயரிய நோக்கில், தனது உடலைத் தானமாக வழங்கத் தனது மனைவி மற்றும் மகளின் ஒப்புதலுடன் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளதாக விஜயகுமார் தெரிவித்தார்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: