பருப்பு தேவையில்லை; இட்லி, தோசைக்கு ருசியான சாம்பார் 10 நிமிடத்தில் செய்யுங்க

ருசியான டிபன் சாம்பார் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

ருசியான டிபன் சாம்பார் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
food
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவை, ருசியான டிபன் சாம்பார் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தக்காளி - 3
வெங்காயம் -  2
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் -  தேவையான அளவு 
கடுகு - சிறிதளவு 
எண்ணெய் - தாளிக்க 
கறிவேப்பிலை  - சிறிதளவு 
பெருங்காயம்  - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
கடலை மாவு - 2 ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 

செய்முறை 

முதலில் குக்கரில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இப்போது அதை மசித்து தனியாக வைக்கவும். 

Advertisment
Advertisements

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அதில் வேக வைத்து மசித்த கலவையை சேர்க்க வேண்டும்.இப்போது தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

சாம்பார் கொதித்து வரும் போது, 2 ஸ்பூன் கடலை மாவை அதில் சேர்க்க வேண்டும். மாவு நன்கு கரைந்து கெட்டி பதத்திற்கு வந்த பின்பு கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான டிபன் சாம்பார் ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: