Advertisment

Tips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா? ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்!

முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tips to control Oil face - முகத்தில் எண்ணெய் வழிகிறதா? ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

Tips to control Oil face - முகத்தில் எண்ணெய் வழிகிறதா? ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த சில டிப்ஸ்!

எண்ணெய்ப் பசை சருமப் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையே. நன்றாக குளித்து ஃப்ரெஷ்ஷாக கிளம்பி வெளியே சென்றால், சிறிது நேரத்தில் முகத்தில் எண்ணெய் வடிந்து, அதைத் துடைத்து துடைத்து, கைக்குட்டையில் இருந்து அன்று மாலை பஜ்ஜி போடுமளவிற்கு எண்ணெய் பிழிந்து எடுத்துவிடலாம். இந்த எண்ணெய் பசை சருமப் பிரச்னையை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த சில டிப்ஸ் இங்கே,

Advertisment

சோப்பு வேண்டாம்

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

மோர்

மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

புதினா

சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.

தக்காளி

தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவி வந்தால் முகம் பளபளக்கும்.

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment