வீட்டில் இருக்கும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி தொல்லையை தீர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்து தற்போது காணலாம்.
2 முதல் 5 ஸ்பூன் கடுகை மிக்ஸியில் போட்டு ஒரு முறை மட்டும் அரைத்து எடுக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா மற்றும் சோப்பு நீர் ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும். இதன் பின்னர், அலுமினியம் ஃபாயில் பேப்பரை சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்க வேண்டும்.
இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில், அரைத்து எடுத்த கடுகை போட்டு கட்டிக் கொள்ளலாம். பின்னர், இந்த ஃபாயில் பேப்பரில் ஊசி வைத்து சிறிய துவாரங்கள் போட வேண்டும். கடுகின் மனம் இதன் மூலம் வெளியேறும் அளவிற்கான துவாரம் போடுவது அவசியம்.
இந்த ஃபாயில் பேப்பரை பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் இருக்கும் பகுதிகளில் வைத்து விடலாம். இதனால் வீட்டில் இருக்கும் பூச்சி தொல்லைகளுக்கு தீர்வு காண முடியும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் இதனை எடுக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.