10 ரூபாய் போதும்… பழைய பட்டு புடவை புதுசு போல் ஜொலிக்கும்; இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!
நம் வீட்டில் இருக்கும் பழைய பட்டுப் புடவையை எவ்வாறு புதியது போன்று மாற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக பத்து ரூபாய் செலவு செய்தாலே போதுமானதாக இருக்கும்.
நம் வீட்டில் இருக்கும் பழைய பட்டுப் புடவையை எவ்வாறு புதியது போன்று மாற்றலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக பத்து ரூபாய் செலவு செய்தாலே போதுமானதாக இருக்கும்.
அதிக விலை கொடுத்து வாங்கிய பட்டுப் புடவைகளை பல ஆண்டுகளுக்கு நாம் அப்படியே பத்திரமாக வைத்திருப்போம். இவற்றை சில ஆண்டுகள் கழித்து எடுத்துப் பார்த்தால், அதன் பளபளப்பு சற்று குறைவாக காட்சி அளிக்கும்.
Advertisment
மேலும், சில புடவைகளை சில முறை உடுத்தினாலே அதில் இருக்கும் ஷைனிங் முற்றிலும் குறைந்து போய் இருக்கும். எனினும், பட்டுப் புடவைகளை எப்போதுமே புதியது போன்று பராமரிக்க சில வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.
இதற்காக ஒரு சிறிய பாக்கெட் ஈனோ பொடியை வாங்கி, அதனை சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலக்க வேண்டும். இந்த பவுடரை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி பட்டுப் புடவை முழுவதும் தூவி விட வேண்டும்.
இப்போது, கையில் சாக்ஸ் அணிந்து கொண்டு புடவை மீது தூவிய பொடியை அனைத்து இடங்களில் தேய்க்க வேண்டும். மறுபுறம், ஒரு கிளாஸில் சிறிதளவு ஷாம்பூ மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இதையடுத்து, பட்டுப் புடவை மீது ஒரு பட்டர் பேப்பரை விரித்து அதன் மீது, ஷாம்பூ கரைசலை ஸ்ப்ரே செய்ய வேண்டும். இனி, அயன் பாக்ஸ் கொண்டு பட்டர் பேப்பர் மீது அழுத்தமாக தேய்க்கலாம். இவ்வாறு செய்தால் பழைய பட்டுப் புடவை பார்ப்பதற்கு புதியது போன்று மாறி விடும்.