2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி: திருச்செந்தூர் கோயிலில் கோடிகளில் குவிந்த உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Tiruchendur te

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வசதிகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறும். 

Advertisment

அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் இன்று (செப்.25) நடைபெற்றது. உழவாரப் பணிக் குழுவினா், கோவில் பணியாளா்கள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த மாதம் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1,589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

மேலும் கோவில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 860 ரூபாயும், கோசாலை பராமரிப்புக்காக 82 ஆயிரத்து 722 ரூபாயும் வருமானமாக கிடைத்துள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: