tirupati temple : ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் காணிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காணிக்கை வழங்குவதால் பணக்கார கோவிலாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனப் பிரதிநிதி ஒருவர், தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை நேற்று காணிக்கையாக அளித்ததாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதனை திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி பெற்றுக் கொண்டதாகவும், திருமலை திருப்பதியில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்துக்குப் பயன்படுத்தும் படி நன்கொடையாளர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1985-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வழங்கிய காணிக்க ஆயிரம் கோடி ரூபாய் வங்கி டெபாசிட் மூலமான வட்டியைக் கொண்டு கோவிலில் ஆங்காங்கே அன்ன தானம் வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பலனடைவதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, நம்ம சென்னையில் திருப்பதி கோவில்
திருப்பதியில் இருக்கும் சில வசதிகள்:
1. திருப்பதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் எல்1, எல்2, எல் 3 என்று மூன்று வகையான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்பட்டது. இந்த நடைமுறை பிரம்மோற்சவத்திலும் கடைப்பிடிக்கப்படும். எனவே, விஜபி தரிசனம் என்பதே திருப்பதியில் இனி கிடையாது
2. திருப்பதியில் பக்தர்கள் வைகுண்டம் 1, வைகுண்டம் 2 ஆகிய பக்தர்கள் காத்திருப்பு அறையில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பக்தர்கள் காக்க வைக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க விரும்புவர்கள் இரவு நேரம் உங்கள் பயணத்தை தொடங்கினால் விடியற்காலையில் ஏழுமலையானை விரைவாக தரிசிக்கலாம்.
3. .சாமியை விரைவாக தரிசிக்க ஸ்ரீப்பரி மெட்டு வழியே சிறந்தது. 2 மணி நேரம் எடுக்கும். அலப்பிரி மெட்டு வழியாக சென்றால் 4 மணி நேரம் 30 வினாடிகள் ஆகும்.