திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் போர்ட் செய்து கொடுகிறது. அதே நேரம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கைகளை வழங்குகின்றனர். பணம், பொருள், தங்கம், வைரம் என பெரும் காணிக்கை வழங்கப்படும்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.66 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“