/indian-express-tamil/media/media_files/P1G8nVhhrg6Of4I3xabr.jpg)
Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக பக்தர்களுக்கு அனைத்து இடங்களிலும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக திருமலையில் ஆங்காங்கே அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அன்னபிரசாதம் தயாரிப்பதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் அரிசி மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் வரும் நாட்களில் ஆர்கானிக் அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, பழைய முறையில் சாதாரண அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதற்கு தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில், ”திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ.ஷ்யாமள ராவ், கோவில் புரோகிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் சமீபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில் அன்ன பிரசாத விநியோகம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அன்னப்பிரசாதம் தயாரிப்பது குறித்தோ, தயாரிப்பை அதிகரிப்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஸ்ரீவாரி கோவிலில் அன்ன பிரசாதம் தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை”, என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.