திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட், ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி டிசம்பர் 1 முதல் 20 வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“