/indian-express-tamil/media/media_files/TsP4XSCfMIaRWIL0np8M.jpg)
Tiruvannamalai Temple
திருவண்ணாமலையில் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.01 மணி முதல் மறுநாள் இரவு 10.25 மணி வரை சித்ரா பவுர்ணமி கிரிவலம் வருகிறது.
சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
அந்த வகையில், 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதை பகுதியில் பக்தர்களுக்குத் தேவையான இடங்களில் போதுமான கழிவறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன.
இந்நிலையில், கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தர்ப்பகராஜ், சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலி நெய் தீபம் விற்பனை செய்யவும், கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், முறையான தரமான உணவுகள் வழங்க வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.