தக்காளி, உலகெங்கும் சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகத் திகழ்கிறது. வெறும் காய்கறியாக மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகவும் தக்காளி போற்றப்படுகிறது.
Advertisment
தக்காளி சமையலில் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. குழம்புகள், பொரியல்கள், கூட்டு வகைகள் என எண்ணற்ற இந்திய உணவு வகைகளில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் பீட்சா சாஸ், கெட்சப், சூப் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களின் அடிப்படை மூலப்பொருளாக தக்காளி விளங்குகிறது.
இங்கு தக்காளிப் பொடி எப்படி செய்வது என்று இந்த வீடியோவை பாருங்க
முதலாவதாக, தக்காளிகளை சில நாட்களுக்கு ட்ரையரில் வைக்கவும். ட்ரையரைப் பயன்படுத்துவது முக்கியம், தக்காளி சரியாக உலரவில்லை என்றால் கெட்ட வாடை வீசக்கூடும்.
Advertisment
Advertisements
தக்காளிகள் உறுதியாகும் வரை உலர வைக்க வேண்டும், ஆனால் அவை மொறுமொறுப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உலர்ந்ததும், தக்காளிகளை ஒரு பவுடர் செய்யும் இயந்திரத்தில் போட்டு அரைத்து பொடியாக மாற்றவும்.
30 கிலோ தக்காளியை உலர வைத்ததில் இருந்து 3 கிலோ தக்காளி தூள் கிடைக்கும்.
பொடிகள் தயாரிக்கும்போது, இறுதி எடையில் குறைவு ஏற்படும். உதாரணமாக, நீங்கள் 1 கிலோவை பொடி செய்தால், சுமார் 200 கிராம் குறைவாக கிடைக்கும்.
இந்த தக்காளி தூள் உணவகங்கள், சூப் கடைகள், மசாலா நிறுவனங்கள் மற்றும் உடனடி கலவைகளில் பயன்படுத்தப்படலாம். கூடுதல் சுவைக்காக அவசர சட்னிகளிலும் இதை சேர்க்கலாம்.
தக்காளி தூள் தயாரிப்பது ஒரு லாபகரமான தொழிலாக இருக்கலாம், குறிப்பாக தக்காளி சீசனில் மலிவாக கிடைக்கும்போது.
குறைந்த விலைக்கு பண்ணைகளில் இருந்து நேரடியாக வாங்கலாம்.
சூப் கடைகள் நடத்துபவர்களுக்கு இந்த தூள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.