/indian-express-tamil/media/media_files/nyxNUZqQOwk7EhWPAPnV.jpg)
இட்லி, தோசைக்கு, சப்பாத்திக்கு மட்டுமல்ல பிரியாணிக்கு கூட சிக்கன் கிரேவி ஸ்டைலில் செய்யப்பட்ட இந்த தக்காளி குருமா குழப்பை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்.
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
குருமா செய்ய தேவையானவை
எண்ணெய் - 3 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை, கல்பாசி, ஜாவித்ரி - சிறிதளவு
வெங்காயம் - 1
பூண்டு இடித்தது - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 6
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில், மிக்ஸி ஜார் எடுத்து அதில் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டப்பட்டுள்ள பொருட்கள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்கவும்.
அடுத்து இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவைப்பட்டால் மீண்டும் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான கம கம தக்காளி குருமா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.