தக்காளி பூரி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
கோதுமை மாவு – 2 கப்
ரவை – 1/4 கப்
உப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
சமையல் சோடா – 1 ஸ்பூன்
புதினா – 4 இலை
அரைத்த தக்காளி – 1 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், சமையல் சோடா, புதினாவை போட்டு கலக்கவும். தக்காளி கலவையை சேர்த்து மிதமான கெட்டியான மாவாக உருவாக்கவும். 10 நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும். இதன் பின், அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரியை போட்டு எடுத்தால் சுவையான தக்காளி பூரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“