பொதுவாக நாம் முகத்தை பராமரிப்பதைப் போன்று பாதங்களை பராமரிப்பதில்லை. இதனால், பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அதன் அழகை கெடுக்கிறது. எனவே முகம் மற்றும் முடியை பராமரிப்பது போலவே கால் பாதங்களையும் பராமரிப்பது அவசியம்.
உங்கள் பாதங்களை பிரகாசமாக்க நீங்களே வீட்டில் எளிதாக செய்யக்கூடிய ஒரு அழகுக் குறிப்பு இங்கே உள்ளது. இதை செய்வதற்கு உங்களுக்கு டூத் பேஸ்ட் மற்றும் காஃபி தூள் மட்டும் போதும்.
எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில் பட்டாணி அளவு டூத் பேஸ்ட், சிறிது காபி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் உங்களுக்கு விருப்பமான டால்கம் பவுடருடன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இதை நன்றாகக் கலந்து, அந்த பேஸ்ட்டை உங்கள் பாதங்கள் முழுவதும் தடவவும்.
இது நன்றாக காய்ந்து போகும் வரை சுமார் 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் உங்கள் பழைய டூத் பிரஷை ஈரப்படுத்தி, உங்கள் கால்களை தேய்க்கவும். உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கழுவவும். இதனால் உங்கள் பாதங்கள் உடனடியாக பிரகாசிக்கும்!
உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள். எனவே, பாதங்களின் கீழ்ப்பகுதியில், சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு இருக்கிறதா என்று, அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தாலோ, கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“